இரட்டை குழந்தைகளால் ஏற்படும் மகிழ்ச்சி, ஒரு அழகான பயணத்தில் இருப்பதை போல் உணர செய்கிறது. இரட்டையர்கள் தங்களுக்கென தனியாக ஒரு உலகத்தை ஏற்படுத்தி கொண்டு, வளர்க்கிறார்கள் மற்றும் ஒன்றாக கற்றுக்கொள்கிறார்கள். இப்படி இரட்டையர்களாக பிறந்து மகிழ்ச்சி அடைய, கடவுளால் ஆசிர்வதிக்க பட்டிருக்க வேண்டும். பல வருடங்கள் ஒருவருக்கொருவர் பலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பார்கள்.
1 நுண்ணுணர்வு
பிறந்த நேரத்தில் பிரிக்கப்பட்ட இரட்டையர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்வை வாழ வழி வகுக்கும். அவர்களால் அவர்களது நுண்ணுணர்வு வாயிலாகவே யூகிக்க முடியும். இருவேறு நாடுகளில் இருந்தாலும், ஒருவர் மற்றொருவரின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இரட்டையர்களின் மற்றொரு பொதுவான அம்சம் அவர்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்வது. சில அரிதான சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு இடையேயான தூரத்தை பொருட்படுத்தாமல், மற்றவர்கள் உணர்ச்சி நிலையில் இருக்கும் ஆபத்து அல்லது எதிர்மறையான உணர்வை அவர்கள் உணர்கிறார்கள்.
2 அவர்களின் சொந்த மொழி
பெரும்பாலான இரட்டையர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்ள ஒரு சொந்த மொழியை உருவாக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் எப்படி பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிந்திருப்பார்கள், நீங்கள் புரிந்து கொள்ள முடியாத வார்த்தைகளின் ஒருவருக்கொருவர் விரிவாக உரையாடிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள். அவர்கள் பேசுவது அவர்களுக்கு மட்டுமே புரியும்.
3 கருவறை முதல் நண்பர்கள்
இரட்டையர்கள் கருவறையிலிருந்தே சிறந்த நண்பர்களாக தங்கள் வாழ்கை பயணத்தை துவங்குகிறார்கள். அவர்கள் தாயின் கருவறையில் இருக்கும் போதிலிருந்தே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் கைகளை பிடித்து கொண்டிருப்பதிலிருந்தே, அவர்களுக்குள்ளான நெருக்கம் நமக்கு தெரிய வரும். அவர்களது அக்கறை கருவிலிருக்கும் போதே துவங்கிவிடுகிறது.
4 எப்போதும் சிறந்த நண்பர்கள்
அவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள். எவ்வளவுதான் அவர்கள் பள்ளிகளில் அனைவருடனும் சேர்ந்து இருந்தாலும், அந்த நாளின் இறுதியில், ஒருவருக்கொருவர் மற்றவரை ஆறுதலாக தேடுவார்கள். ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாக இருப்பது பெரும்பாலும் அதிகம், ஆனாலும் அவர்களது ஆளுமை திறன் வேறுபாடடைகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாய் இருப்பதற்கு காரணம், அவர்களின் ஒரே தோற்றம் அல்ல. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் தனித்தன்மையை நிறைவு செய்வதற்கான திறனைக் கொண்டுள்ளனர்.
5 எப்படி வேறுபாடறிவது?
இரட்டையர்களிடம் வேறுபாடறிவதற்கான ஒரே வழி அவர்களின் தொப்புள். சில தாய்மார்கள் குழந்தைப்பருவத்தில் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் குழப்பமடையக்கூடும், அந்த சமயத்தில் அவர்களின் துணியை எடுத்து வித்தியாசப்படுத்தி கொள்வார்கள். இதுவே இருவரையும் வித்தியாசப்படுத்த சிறந்த வழி. இருவருக்கும் இருவேறு வண்ணங்களில் ஆடை அணிவிக்கலாம். ஏதும் வெளியில் தெரியும் தழும்புகள், மச்சங்கள் போன்றவற்றை வைத்தும் வித்தியாசப்படுத்தலாம். ஆனால் இருவருக்கும் ஒரே வர்ணத்தில் உடையணிவதையே விரும்புவார்கள் மற்றும் இதைச் செய்வது எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை அவர்கள் உணருகிறார்கள்.
ஒருவரை போல் மற்றொருவர் இருப்பது என்பது எவ்வளவு ஆச்சர்யமான ஒன்று. அப்படி ஒட்டி பிறந்த இரட்டையர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்.
