குழந்தைக்கு தரும் தாய்ப்பால் போதுமா என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது?
தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தை தருவதோடு, தாய் - பிள்ளை இருவருக்கும் உண்டான உறவின் வலுவாகவும் அமைகிறது. ஆனால், உங்கள் குழந்தைக்கு எவ்வளவு தாய்ப்பால் தர வேண்டும் என்பது உங்கள் மனதில் எழும் ஒரு கேள்வியாக இருக்கலாம். அதற்கான பதிலுடன் இன்னும் பல சுவாரஸ்யமான தகவலை நாம் இப்போது தெரிந்துக்கொள்வோமா?

சோதனை அவசியம்:
தாய்ப்பால் பருகும் குழந்தையின் வாயானது அகன்று விரிந்திருக்க வேண்டும். நீங்கள் தாய்ப்பால் கொடுக்க தொடங்கியது முதல், தாய்ப்பால் சுரந்து வெளியேறும் வரை உங்கள் குழந்தையின் வாய் பகுதி குறுகி இருக்க, 1 முதல் 2 நிமிடங்களுக்கு அவன் உறிஞ்சுவான். தாய்ப்பால் அவன் வாயை அடைய, 'க்கா' எனும் சத்தம் எழுப்பியபடி மெல்ல உறிஞ்சுவான். உங்கள் குழந்தை வாயை திறந்து பால் குடித்து இடையில் நிறுத்தி மீண்டும் இறுதியில் மூடுவான். அப்படி என்றால் அவனுக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறது என அர்த்தமாகும். ஒருவேளை அவன் இந்த முறையை பின்பற்றாமல் பருகினால் மருத்துவரை பார்த்து அறிவுரை பெறுவது நல்லது.

தாய்ப்பாலூட்டும் முறை எப்படி இருக்கும்?
1. குழந்தை தன் வாயை மெல்ல திறப்பான்.
2. அவன் வாய் அகன்று விரிந்திருந்தால் இடையில் ஒரு முறை நிறுத்துவான்.
3. பின்னர், அவன் தன் வாயை மூடுகிறான்.
மலம் கொண்டு எப்படி தெரிந்துகொள்வது?
1. உங்கள் குழந்தைக்கு கிடைக்கும் சீம்பால் எவ்வளவு என்பதை அவன் கழித்த மலம் மூலம் நாம் தெரிந்துக்கொள்ளலாம்.
2. உங்கள் குழந்தை முதல் 2 நாட்கள் பிண்ட மலம் என்பதை கழிக்க, இதன் நிறமாக கடும் பச்சை-கறுப்பு நிறம் காணப்படும். எனவே, இந்த பிண்டமலத்தை தவிர்க்க உங்கள் குழந்தை அக்கறை காட்டும்போதெல்லாம் சீம்பால் தருவது நல்லது.
3. இதனால் 3ஆம் நாளில் மலத்தின் நிறம் வெளிர் பச்சை - பழுப்பு நிறமாக மாறுகிறது.
4. நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் அளவு அதிகரிக்க, 4 அல்லது 5ஆம் நாளில் மலம் மஞ்சள் நிறத்தில் மாறும்.

எத்தனை முறை மலம் கழிப்பார்கள்?
1. குழந்தை பிறந்த இரண்டு நாளில் 1 அல்லது 2 முறை மலம் கழிப்பார்கள்.
2. மூன்று நாட்களுக்கு பிறகு நான்கு வாரங்கள் வரை, 24 மணி நேரத்தில் 2 முறையாவது மலம் கழிக்க வேண்டும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் மலம் கழிக்க ஆசைப்படுவார்கள்.
3. நான்கு வாரத்திற்கு பிறகு குழந்தை மலம் கழிக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படலாம். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைத்திருந்தால் அவன் வயிறு மென்மையாக காணக்கூடும். ஒவ்வொரு 24 மணி நேரத்தில், அவன் 6 முதல் 8 டயப்பரை மலம் கழிப்பதற்காக நனைக்கிறான்.

வயதுபடி மலத்தின் நிறம் எப்படி இருக்கும்?
1 மற்றும் 2ஆவது நாட்களில் பச்சை கலந்த கறுப்பு நிறத்தில் மலம் கழிக்க, பசைத்தன்மை கொண்டதாய் காணப்படும். ஒரு நாளில் 1 அல்லது 2 முறை மலம் கழிப்பான்.
3 மற்றும் 4ஆவது நாட்களில் பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் மலம் கழிப்பான். ஒரு நாளில் குறைந்தது 2 முறை மலம் கழிப்பான்.
5 ஆவது நாள், மஞ்சள் நிறத்தில் மலம் கழிப்பான். குறைந்தது 2 முறை மலம் கழிப்பான்.
6 ஆவது நாள் முதல் 4 வாரங்கள் வரை மஞ்சள் நிறத்தில் புள்ளி வடிவத்தில் மலம் கழிப்பான். குறைந்தது 2 முறை அல்லது ஒவ்வொரு முறை தாய்ப்பாலூட்டும் போதும் மலம் கழிப்பான்.

